தமிழகத்தில் மிகப்பெரும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதி- இலங்கை வழியாக ஊடுருவல்: உளவுத்துறை 'வார்னிங்
டெல்லி: தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று மத்திய உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் மிகப் பெரும் தாக்குதலை நடத்துவதற்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பு இதுவரை தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தது. தற்போது தீவிரவாதி லக்வி விவகாரத்தில் கடுமை காட்டி வருவதால் இதுவே தாக்குதலுக்கான தருணம் என லஷ்கர் அமைப்பு கருவதுதாக உளவுத்துறை அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தனர்.
தீவிரவாதி லக்வியை சிறையில் இருந்து விடுதலை செய்யவே கூடாது என்று பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் தற்கொலைப்படை தாக்குதலையோ அல்லது சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தோ தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் இந்தியாவின் நெருக்கடிகளுக்கு பணிந்து போகும் பாகிஸ்தான் அரசுக்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதும் லஷ்கர் இ தொய்பாவின் திட்டமாம். இதனால் நாட்டின் பதற்றமான பகுதிகளில் அனைத்து காவல்நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல்வழி ஊடுருவி தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்கின்றனர் உளவுத் துறையினர். தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களே தீவிரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கக் கூடுமாம்.
குறிப்பாக தமிழகத்துக்குத்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனராம். இலங்கையில் இருந்து கடல் வழியாக பல தீவிரவாதிகளை அந்த அமைப்பு தமிழகத்துக்குள் ஊடுருவச் செய்துள்ளது. தற்போது இலங்கை அரசுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருவதை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்துவது என லஷ்கர் அமைப்பு முடிவு செய்துள்ளதாம்.
ஏற்கெனவே மீன்பிடி படகு மூலம் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நுழைய முயற்சித்தது முதலே குஜராத் கடற்பரப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதே பாணியிலான தாக்குதலை நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறதாம் லஷ்கர் அமைப்பு.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications