தவறை ஒப்புக்கொள்ளாவிட்டால் டெல்லி போலீஸ் மீது சட்ட நடவடிக்கை: கேரள முதல்வர் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: "சட்டத்தை மீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் டெல்லி போலீசார், கேரள இல்லத்திற்குள் சென்றுள்ளனர். இந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கேரளா சட்ட நடவடிக்கை எடுக்கும்" என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த தொலைபேசி புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கண்டனம் தெரிவித்திருந்தார்.

கேரள முதல்வருக்கு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.
கேரள எம்.பிக்கள், பத்திரிகையாளர்கள் தர்ணா நடத்தினர். இந்த விவகாரத்தை கேரளா தனது சுய மரியாதைக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்த்து கொதித்து எழுந்தது. இதையடுத்து, போனில் தகவல் சொன்ன இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்ற நபரை இன்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கேரள இல்லத்தில் ரெய்டு நடத்தியதாக வரும் தகவல்கள் பொய்யானவை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்து சேனா அமைப்பில் இருந்து, விஷ்ணுகுப்தா என்ற நபர் போலீசாருக்கு போன்போட்டு, கேரள இல்லத்தில் பசு மாமிசம் பறிமாறப்படுவதாகவும், அங்கு போராட்டம் நடத்த வேண்டிவரும் என்றும் கூறினார்.
இதையடுத்து டெல்லி போலீசார் கேரள இல்லத்துக்கு சென்று, மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா, இல்லையா என்று விசாரித்துவிட்டு, இப்படி ஒரு மிரட்டல் வந்துள்ளதால், உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அறிவுறுத்திவிட்டு திரும்பினர். பாதுகாப்பை பலப்படுத்த சென்ற காவல்துறை, ரெய்டு நடத்திவிட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது ஏன் என்று புரியவில்லை என்று கூறியிருந்தார்.
டெல்லி போலீசாரின் பதிலை ஏற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி தயாராக இல்லை. இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், "சட்டத்தை மீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் டெல்லி போலீசார், கேரள இல்லத்திற்குள் சென்றுள்ளனர். இந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கேரளா சட்ட நடவடிக்கை எடுக்கும்.
கேரள பவனில் எருமை மாட்டுக்கறிதான் பரிமாறப்பட்டது. டெல்லியில் எருமைக்கறி பரிமாற எந்த தடையும் கிடையாது. வழக்கம்போல, கேரள பவனில் எருமைக்கறி பரிமாறப்படும். கேரள அரசுக்கு ஆதரவுகரம் நீட்டிய கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications