மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பதக்கங்களை திருப்பித் தருவோம் என அம்மாநிலத்தின் 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில, மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அப்படி வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தங்களது பதக்கங்களை திருப்பி ஒப்படைப்போம் என 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான மனுவையும் 13 விளையாட்டு வீரர்கள் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications