வேலைக்காக... பிளிப்கார்ட்டில் தன்னையே விற்ற ஐ.ஐ.டி மாணவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்க மாநிலம், கரக்பூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் பிரபல விற்பனை இணையதளமான பிளிப்கார்ட்டில் வேலைக்கு சேர நூதன உத்தியைப் பயன்படுத்தி அனைவரையும் ஈர்த்துள்ளார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னையே விற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்தவர் ஆகாஷ் நீரஜ் மிட்டல் என்கின்ற மாணவர்.

மேலாளர் வேலைக்கு:

மேலாளர் வேலைக்கு:

இவர் இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் உற்பத்தி மேலாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தார்.

ஆயிரக்கணக்கான விண்ணப்பம்:

ஆயிரக்கணக்கான விண்ணப்பம்:

பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததால் சுமார் 5 வினாடிகளில் ஒரு விண்ணப்பத்தை பார்த்துவிட்டு ஒதுக்கிவிடுவார்கள் என்பதை ஆகாஷ் நீரஜ் மிட்டல் உணர்ந்தார்.

எளிதில் தேர்வாக:

எளிதில் தேர்வாக:

இதனால் தேர்வு செய்பவர்கள் தனது விண்ணப்பத்தை முழுமையாக படிக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார். இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் தன்னை விற்பனை செய்வது போன்ற பாணியில் தனது விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பியுள்ளார்.

வேடிக்கை விளையாட்டு:

வேடிக்கை விளையாட்டு:

விண்ணப்பத்தில் அவர், ‘‘நாட்டில் உள்ள மிகவும் மேன்மை தங்கியவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவேலையில் நிலைத்து நிற்பது என்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும். சில வேடிக்கையான விஷயங்களை செய்யத் தொடங்க வேண்டும்.

வித்தியாசம் அவசியம்:

வித்தியாசம் அவசியம்:

கூட்டத்தில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய விண்ணப்பம்" இவ்வாறு தெரிவித்து இருந்தார். ஆனால் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் ஆகாஷ் நீரஜ் மிட்டலுக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+