மேற்கு வங்கத்தில் கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் பலி!

மேற்குவங்க மாநிலத்தில் கள்ளச் சாரயம் குடித்து 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பர்த்வான்: மேற்குவங்க மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ளது ராமகோபால்பூர் கிராமம். இங்கு சட்டத்திற்கு விரோதமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Illicit liquors kills 6 in West Bengal

இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடியவர்களை மிட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 6 பேர் நேற்றிரவு சிசிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+