குகைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம்.. திகிலடிக்க வைக்கும் ராம் ரஹீமின் காம லீலைகள்!
சண்டிகர்: மாடர்ன் சாமியாராக அவதாரம் பூண்டு பல பெண்களை சீரழித்த ராம் ரஹீமீன் காம லீலைகள் குறித்து புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிபடி உள்ளன. அவர் பாலியல் பலாத்காரம் செய்வதற்குக் கூட கோட் வேர்ட் வைத்து சிஷ்யைகள் பய பீதியுடன் வலம் வந்துள்ளனர்.
குர்மீத் ராம் ரஹீம் யாரையாவது கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அதை பிதாஜி மன்னிப்பு கொடுத்து விட்டார் என்று சங்கேத வார்த்தையில் கூறுவது ஆசிரமத்தில் வழக்கமாம்.
தனக்குப் பிடித்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தனது காம லீலைகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே ஒரு ரகசிய பாதாள அறையை வைத்திருந்தாராம் குர்மீத். அந்த அறைக்கு குஃபா என்று பெயர்.
குகையில் காம லீலைகள்
இந்த குகை அறையில்தான் அநியாயமாக பல பெண்களை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வந்துள்ளார் ராம் ரஹீம். அவரால் இங்கு பாலியல் ரீதியாக சிதைக்கப்பட்ட இரு சிஷ்யைகள் கொடுத்த புகாரின் பேரில்தான் தற்போது ராம் ரஹீமுக்கு 20 வருட சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
2 பெண்கள்
கடந்த 2002ம் ஆண்டு இந்த இரு பெண்களையும் இந்த பாதாள அறையில் வைத்து பாலியல் ரீதியாக சிதைத்துள்ளார் ராம். இந்த இருவரும் கடந்த 2009 மற்றும் 2010 என இரு ஆண்டுகளில் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிததனர்.
Recommended Video
சங்கேத வார்த்தையில்
குகை அறை காம லீலைகள் குறித்து இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்குப் பிடித்த பெண்களை இங்கு வைத்துத்தான் ராம் ரஹீம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவார். இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து நாங்கள் சங்கேத வார்த்தைகளில் பேசிக் கொள்வோம்.
மன்னிச்சுட்டாரா
பிதாஜி மன்னிச்சுட்டாரா என்று கேட்டால் ராம் ரஹீம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டாரா என்று அர்த்தம். இப்படித்தான் நாங்கள் மறைமுகமாக பேசிக் கொள்வது வழக்கம் என்று அவர்கள் தங்களது வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.