கிளாஸ் ரூமில் கட்டிப்பிடித்து.. தகாத செயலில் ஈடுபட்ட 2K கிட்ஸ் மாணவர்கள்.. கொந்தளித்த பொதுமக்கள்!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் சில மாணவ - மாணவிகள் தகாத செயலில் ஈடுபட்ட விடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்கள், இணையம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காலத்து இளைஞர்கள் மிக எளிதாகத் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். பள்ளிகளிலேயே அவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இப்படித்தான் சில மாணவ- மாணவிகள் பள்ளி வகுப்பறையிலேயே தகாத செயல்களில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம்
அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் ராமானுஜ் குப்தா பியூ கல்லூரி இயங்கி வருகிறது. அது இரு பாலரும் படிக்கும் பியூ கல்லூரியாகும். இதனிடையே அங்கு +1 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையிலேயே தகாத செயலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மொத்தம் 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோ
இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வகுப்பறையிலேயே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டும், சீண்டி விளையாடிக் கொண்டும் இருந்துள்ளனர். அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவர் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் உள்ளனர்.

சஸ்பெண்ட்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், பொதுமக்கள் பலரும் மாணவர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்குக் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதையடுத்து இதில் சம்மந்தப்பட்ட மாணவ- மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

கடும் நடவடிக்கை
மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் மாணவ- மாணவிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறி உள்ள கல்லூரி நிர்வாகம், சம்மந்தப்பட்ட மாணவ மாணவிகளை விளக்கம் தரும் வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர், அவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விளக்கம்
இந்தச் சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், "ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இந்த ஒழுங்கீன செயலில் ஈடுபட்டு உள்ளனர். எங்கள் கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. மேலும் வளாகத்தில் மொபைல் போன்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்தவர்கள்" என்றார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications