சுதந்திர தினம்... தேசியக் கொடியின் வர்ணத்தில் உணவு வகைகளை பரிமாறும் உணவகங்கள்
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியின் வர்ணத்தில் உணவு வகைகளை உணவகங்கள் பரிமாறவுள்ளன.
டெல்லி: 71ஆவது சுதந்திர தினத்தையொட்டி 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களில் எந்த மாதிரியான உணவுகள் பரிமாறப்படும் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கொண்டாட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது பாரம்பரிய உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பர்பிகள், டோல்லாக்கள், சாண்ட்விச்கள், பிரியாணி உள்ளிட்டவை காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் உருவாக்கப்படவுள்ளன. சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏராளமான வகைகள் செய்யப்படவுள்ளன.
அவற்றில் ஆட்டா சிக்கன் (கோட் கபூரா, பஞ்சாப்), ரயில்வே மட்டன் கறி (கலோனியல் இந்திய), முல்தானி பன்னீர் (முல்தான், பிரிக்கப்படாத பஞ்சாப்), ரஞ்சித்ஷாஹி பன்னீர் (பஞ்சாப்), பூனி மகாய் கி ராப (ராஜஸ்தான்), சேப்பு பாடி (இமாச்சலம்) மற்றும் மஷ் கி தால் (ஹைதராபாத்) உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications