Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏமனில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏமன் தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

sushma

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கித் தவித்த 4 ஆயிரத்து 700 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் தவிர 41 நாடுகளைச் சேர்ந்த 1000 பேரையும் மத்திய அரசு மீட்டது. இந்த மீட்பு பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்டது. ஆபரேஷன் ராஹத்தை அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டியுள்ளன. மீட்பு பணி முடிந்த பிறகு கடந்த 9ம் தேதி ஏமன் தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது.

ஏமனில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதனைத் தொடர்ந்து சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர்கள் செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கூறுகையில்,

ஏமனில் இருந்த இந்திய தூதரக ஊழியர்களை இன்று பத்திரமாக வெளியேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+