கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ்: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் புதிதாக இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தோடு கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆன்டி-வைரல் மருந்தான மோல்னுபிரவிர் (Molnupiravir) எனும் மருந்துக்கும் அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டடு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் சிரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்புமருந்து ஆகியவற்றுக்குப் பிறகு தற்போது இந்தியாவிலேயே தயாரான கோர்பிவேக்ஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/mansukhmandviya/status/1475699946544570372
இதை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாந்தவியா 'ஹாட்ரிக்' என்று வர்ணித்துள்ளார்.
தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் எட்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, சைகோவ்-டி, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு இந்திய அரசு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கியிருந்தது.
பிற செய்திகள்:
- பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன?
- அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்பு வெளிநாட்டு நிதி பெற இந்திய அரசு தடை
- "புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்
- கொரோனா தடுப்பூசி: 15-18 வயதுடையோருக்கு எப்போது போடலாம்? - முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?













Click it and Unblock the Notifications