ஸ்வீட் எடு கொண்டாடு.. வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

அட்டாரி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பகிரிந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

India - Pakistan counterparts exchange sweets in Attari-Wagah border

சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இந்த திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல நாடுகளில் பிறை தெரிந்ததை முன்னிட்டு நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈகைத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அட்டாரி - வாகா எல்லையில் இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் ரம்ஜான் திருநாளில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+