ஆகஸ்ட் 25... இஸ்லாமாபாத்தில் நடக்கிறது இந்தியா -பாக் இருதரப்பு பேச்சுவார்த்தை!
டெல்லி: ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் சந்தித்துப் பேச உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்தாண்டு ஜனவரி மாதம் காஷ்மீரில் எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் 2 பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மே 27-ந் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 45 நிமிடம் நடந்த அந்த பேச்சுவார்த்தையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று, இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கும். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரியும் தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டார்கள்.
அப்போது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ஒரே நேரத்தில் டெல்லியிலிருந்தும், இஸ்லாமாபாத்திலிருந்தும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நேற்று டெல்லியில் கூறியதாவது :-
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications