பட்ஜெட் 2018: குஜராத்தின் பரோடாவில் சிறப்பு ரயில் பல்கலைக் கழகம்!

குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

    டெல்லி: குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் தாக்கலில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர்.

    2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

    India’s First ever Rail University in Gujarat says FM

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதுவரை விவசாயிகளுக்கு, கிராம் புரத்திற்கும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் தற்போது குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இதுதான்.

    இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகை செய்யும் என்று கூறப்படுகிறது. பரோடாவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் பிரதமரின் நேரடி விருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இதற்காக அங்கு ஏற்கனவே இருக்கும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் பயனபடுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+