ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: ஆஸ்திரேலிய உதவியை கேட்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் கவர்ந்து இழுப்பதை தடுக்க ஆஸ்திரேலியாவின் உதவியை இந்தியா நாடியுள்ளது.

ஆஸ்திரேல அட்டார்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் இந்தியா வருகை தந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டிற்கு, ஆஸ்திரேலியாவின் ஆதரவை ராஜ்நாத்சிங் கோரினார்.

India seeks Australia help on ISIS conspiracy

இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா, சோட்டா ராஜனை ஆஸ்திரேலிய உளவுத்துறை உதவியோடு, இந்தோனேஷியாவில் இன்டர்போல் போலீசார் கைது செய்த நிலையில், இந்த ஆதரவு கோரல் முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பையை சேர்ந்த ஆரீப் இசாஜ் என்ற இளைஞன், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்றுவிட்டு, நிலைமையை உணர்ந்து இந்தியா திரும்பியபோது கைது செய்யப்பட்டார். அவர் மேலும் பல இளைஞர்களை தீவிரவாதிகளாக முயன்று, சமூக வலைத்தளங்களை அதற்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. அந்த சமூக வலைத்தளங்களின் சர்வர் ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய உதவியை இந்தியா கேட்டுள்ளது. அதேபோல, இந்தியாவில் அரிதினும், அரிதான வழக்குகளில் மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்படுவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அட்டார்னி ஜெனரல் கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+