பதன்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளை அடையாளம் காணும் பொருட்டு இன்டர்போலுக்கு ’பிளாக் கார்னர்’ நோட்டீஸ்
டெல்லி: பதன்கோட் விமானப் படை தளத்தில் சுட்டு வீழத்தப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து அடையாளம் காணும் பொருட்டு, என்.ஐ.ஏ. இன்டர்போல் உதவியை நாடும் பொருட்டு, பிளாக் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த 2 ஆம் தேதி நுழைந்த 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார் விமான கடத்தலில் தொடர்புடைய அவனது சகோதரனான அப்துல் ராப் அஸ்கர் உட்பட நான்கு பேர்தான் காரணம் என்று தேசிய புலனாய்வு துறையினர் உரிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளனர்.
விமானப்படை தளம் முழுவதும் சோதனை நடத்தி வரும் தேசிய புலனாய்வு பிரிவு முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட தீவிரவாதிகளின் கை தடமும், எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட தடமும் தடையவியல் ஆய்வகத்திற்கு அனுப்பட்டு உள்ளது. இண்ணும் சந்தேகத்திற்கு இடமான இருவர் ராணுவ உடையில் சுற்றுவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளத்தில் செல்போன், பைனாகுலர், ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் 40-50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பதன்கோட் விமானப்படை தளத்தில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளின் உடல்களையும் அடையாளம் கண்டறிய சர்வதேச போலீசுக்கு (இன்டர்போல்) 'பிளாக் கார்னர்' நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications