இந்தியா - இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இரு நாட்டு அரசுகள் ஒப்புதல்
இந்தியா - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன.
டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் முடிவுகள் செய்துள்ளன. இரு நாட்டு அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதம்பாலம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இருநாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா - இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் படகுகளை விடுவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications