மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. ரஹானே அசத்தல் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது
போர்ட்ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் வேட்டையாடியது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போர்ட்ஆப் ஸ்பெயினில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களை குவித்தது.
தொடக்க வீரர்கள் ரஹானே 103, தவான் 63, கேப்டன் கோஹ்லி 87, ஹர்திக் பாண்ட்யா 4, யுவராஜ்சிங் 14 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். டோணி மற்றும், கேதர் ஜாதவ் தலா 13 ரன்களுடன் களத்தில் நின்றனர். இதையடுத்து மே.இ.தீவுகளுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ரஹானே 104 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் இந்த ரன்களை குவித்தார்.












Click it and Unblock the Notifications