எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி தாக்குதல்
இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.
காஷ்மீர்: இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரும் இதில் மரணம் அடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. பத்து பேர் கொண்ட இந்திய சிறப்பு ராணுவ படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தியது.
இதில் மூன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவ வீரர்கள் யாருக்கும் இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் பூன்ச் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவத்தின் உள்ளூர் படையால் நடத்தப்பட்டு இருக்கிறது. சரியாக இந்த நபர்களின் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவு செய்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ராணுவ தரப்பு கூறியிருக்கிறது.
இந்த தாக்குதல் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' கிடையாது என்றும் ராணுவம் விளக்கம் அளித்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரே குறிக்கோளுடன் நடத்தப்பட்ட 'செலக்டிவ் டார்கெட்' அட்டாக் என்று ராணுவ தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.
-
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications