கிழக்கு லடாக்கில் முழு அளவிலான போருக்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்.. சீனாவுக்கு எச்சரிக்கை
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட முழு அளவிலான போரை நடத்த இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்று கூறிய இந்திய ராணுவம், சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் ஒரு சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாராக உள்ள , முழுமையாக அமைதியுடன் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடக்கு ராணுவ கமாண்டக தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
உடல் மற்றும் உளவியல் ரீதியாக போரிடும் இந்திய வீரர்களை ஒப்பிடும்போது, சீன ராணுவ வீரர்கள்பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கடினமான சூழலை எதிர் கொண்டவர்கள் இல்லை என்றும் ராணுவ அதிகாரி கூறினார்.
இந்தியாவின் செயல்பாட்டு நிலையில் ராணுவ தளவாடங்கள் போதுமான அளவில் தயாரிக்கப்படவில்லை என்றும், இந்திய வீரர்களால் குளிர்காலத்தில் திறம்பட போராட முடியாது என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவத்தின் வடக்கு காமாண்டக செய்திதொடர்பாளர் கூறினார்.

சீனர்களின் அறியாமை
இது தொடர்பாக அவர் கூறுகையில். சீன ஊடகத்தின் அறிக்கை எனப்து அவர்களின் அறியாமைக்கு சிறந்த உதாரணமாக இருக்கலாம். கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட இந்திய இராணுவம் முழுமையாக தயாராக உள்ளது. முழு அளவிலான போரை நடத்தும் திறன் கொண்டது. ஆனால் இந்தியா அமைதியை விரும்பும் நாடு, அண்டை நாடுகளுடன் நல்ல உறவு கொள்ள விரும்புகிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா எப்போதும் விரும்புகிறது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கையில், இராணுவ மட்டத்தில் அது நீண்டகால நிலைப்பாட்டிற்கும் நன்கு தயாராக உள்ளது .

வெப்பநிலை மைனஸ் 40
லடாக்கில் மிக உயரமான பல மலைகள் உள்ளன. இங்கு நவம்பருக்குப் பிறகு 40 அடி வரை பனிகட்டிகள் தரையை ஆக்கிரமித்து விடும். இதனுடன் வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துவிடும். இது ஒரு வழக்கமான நிகழ்வு. காற்றின் குளிர்ச்சியான சூழல் ராணுவத்திற்கு நிலைமையை இன்னும் மோசமாக்கும். பனி காரணமாக சாலைகளும் மூடப்படுகின்றது ஆனால் இவை அனைத்தையும் மீறி, இந்திய படையினருக்கு மிகவும் ஊக்கமளிக்கும் பகுதி என்னவென்றால், இந்திய வீரர்கள் குளிர்கால யுத்தத்தின் பெரும் அனுபவத்தைக் கொண்டுள்ளனர், மேலும் குறுகிய அறிவிப்பில் செயல்பட உளவியல் ரீதியாக சரிசெய்யப்பட்டுள்ளனர். இந்த உண்மைகள் உலகுக்கு தெரிந்திருந்தாலும், செயல்பாட்டில் உள்ள ராணுவ தளவாட திறன்கள் குறித்து சரியாக அறியப்படவில்லை.

தரமான சேவைகள்
லாஜிஸ்டிக் திறன் இயக்கம், வாழ்விடம் மற்றும் பில்லிங், ஆரோக்கியத்திற்கான தரமான சேவைகள், சிறப்பு ரேஷன்கள், பழுது மற்றும் மீட்பு, வெப்ப அமைப்புகள், உயர்தர ஆயுதங்கள், வெடிமருந்துகள், தரமான ஆடை மற்றும் பல விஷயங்கள் சிறப்பாக உள்து. இவற்றில் பெரும்பாலானவை முன்னர் இருந்ததைவிட இப்போது அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மே முதல் சீனா ஆக்கிரமிப்பு அறிகுறிகளுக்கு பின்னர் அதிரடியாக நிறைய உயர்த்தப்பட்டுள்ளது.உலகில் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அனுபவத்தை இந்திய இராணுவம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புதிய சாலை
பாரம்பரியமாக லடாக்கிற்கு செல்ல இரண்டு வழிகள் இருந்தன, அதாவது சோஜிலா (ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை) மற்றும் ரோஹ்தாங் பாஸ்கள் (மணாலி-லே) வழியாக. அண்மையில் இந்தியா தர்ச்சாவிலிருந்து லே வரை மூன்றாவது சாலையை அமைத்தது, இது மிகக் குறைந்த தூரம் உள்ளது, இந்த சாலை மூடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு . ரோஹ்தாங் பாதையில் அடல் சுரங்கப்பாதையை நிறைவு செய்வது தளவாட திறன்களை இந்தியா பலப்படுத்தியுள்ளது.

நவீன பனி அகற்றும் கருவி
இத்துடன் கூடுதலாக, எங்களிடம் ஏராளமான விமான தளங்கள் உள்ளன, இதன் உதவியுடன் இராணுவத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். நவம்பர் மாதத்திற்கு அப்பால் திறந்திருக்கும் வகையில் நவீன பனி அகற்றும் கருவிகளும் இந்த பாதைகளில் வைக்கப்பட்டுள்ளன, இதனால் வீரர்களின் தினசரி ரோந்துக்க எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்

எரிபொருளும் உள்ளது
பீரங்கிக்கு தேவையான சிறப்பு எரிபொருள் மற்றும் கவசப் பணியாளர்கள் கேரியர்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன, அவற்றின் பராமரிப்புக்கான உதிரிபாகங்கள் உட்பட. அனைத்தும் உள்ளது. தண்ணீர் அருந்த குழாய் மற்றும் கிணறுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. நன்கு வசதியாகவும் மற்றும் சூடாக இருக்கும் அளவுக்கு லடாக் எல்லைப்பகுதியைஇந்தியா மாற்றி உள்ளது. வெப்பமாக்கி கொள்ளும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

சீன ஊடகம் கவலை
சிறிய ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி மற்றும் பீரங்கி வெடிமருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிகழ்விற்கும் மருத்துவ முறையும் உள்ளது. சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட, முழுமையாக அமைதியான மற்றும் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள்.இந்த கவலைகள் சீன துருப்புக்களின் மனதில் ஊடுருவி வருகின்றன, அவை சீன ஊடகங்களில் காணப்படுகின்றன" இவ்வாறு கூறினார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications