ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எதிர்த்து சண்டையிட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, இன்று தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜூலை மாதம் கடந்த 22 நாட்களில் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பலமுறை அத்துமீறி வாலாட்டியுள்ளது. 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். 18 முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரரும், 9 வயது சிறுமியும் பலியாகினர். மேலும், ஒரு ராணுவ வீரர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக பூஞ்ச் கர்மாரா பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் நடத்தியதில் ஃபோக்ர் தாரா பள்ளி கட்டிடம் பெரும் சேதம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இந்திய ராணுவத்தினர் மீது 14 முறை தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications