ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எதிர்த்து சண்டையிட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, இன்று தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜூலை மாதம் கடந்த 22 நாட்களில் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பலமுறை அத்துமீறி வாலாட்டியுள்ளது. 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். 18 முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரரும், 9 வயது சிறுமியும் பலியாகினர். மேலும், ஒரு ராணுவ வீரர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக பூஞ்ச் கர்மாரா பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் நடத்தியதில் ஃபோக்ர் தாரா பள்ளி கட்டிடம் பெரும் சேதம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இந்திய ராணுவத்தினர் மீது 14 முறை தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications