இந்தியா தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. எல்லையில் நீடிக்கும் பதற்றம்
காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவத்தின் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரெல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது.

இதற்கு நமது ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் ராணுவம் கொடுத்த பதிலடியில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. இதனிடையே ராணுவத்தின் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications