சிக்கிம் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்களிடையே கைகலப்பா?
சிக்கிம் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கிடையே கைகலப்பு ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் புதியதாக விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: சிக்கிம் எல்லையோரப் பகுதியில் இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீன வீரர்கள் புல்டோசர்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி, இந்தியப் பகுதிக்குள் சீன ராணவ வீரர்கள் வந்ததால் இரு தரப்புக்கும் கைக்கலப்பு ஏற்பட்டதாகவும், சீன ராணுவத்தினர் புல்டோசர்கள் மூலம் இந்தியாவின் இரண்டு பதுங்கு குழிகளை தகர்த்துவிட்டுச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பதுங்கு குழிகளை தகர்க்க சீனா புல்டோசர்களை பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு வீரர்களிடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ள பகுதியில், இந்திய - சீன வீரர்கள் இடையே 1962 முதல் பிரச்சனை நிலவி வருகிறது என்று கூறப்படுவதற்கும் இந்திய ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications