தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய 'தில்' இந்தியர்.. தேசிய கொடியும் அறிமுகம்
இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார்.
Recommended Video

டெல்லி: இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்த இடம் சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் நிலம் ஆகும். இந்த பகுதியை இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடியது இல்லை.
இவர் இந்த நாட்டுக்கு தன்னை ராஜாவாக அறிவித்தது மட்டும் இல்லாமல் நிறைய எதிர்கால திட்டங்களும் வைத்து இருக்கிறார். தன்னுடைய கனவுகள் குறித்து இவர் விரிவாக பேசியிருக்கிறார்.

மனிதர்கள் வசிக்காத பிர் தாவில்
எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் 'பிர் தாவில்' என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதி உலகின் எந்த நாடுகளின் வரைபடத்தில் இடம்பெறவில்லை. மேலும் இந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கோரியதும் இல்லை. மேலும் உலகிலேயே இந்த பகுதி மட்டுமே மனிதர்கள் வாழ தகுதி படைத்த, யாராலும் உரிமை கோரப்படாத நாடாக இருந்து வந்தது.
தலைவர் ஆனா சுயாஷ் தீட்சித்
தற்போது இந்த 'பிர் தாவில்' பகுதியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் ராஜாவாக அறிவித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த நாட்டிற்கு என்று புதிய கொடி ஒன்றையும் வடிவமைத்து இருக்கிறார். தற்போது அந்த நாட்டில் தனக்கு என்று கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி உள்ளார்.

சுயாஷ் தீட்சித் கொடி நட்ட கதை
சூடானுக்கு அருகில் இருக்கும் இந்த பகுதிக்கு செல்வது மிகவும் கடினம் ஆகும். சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கண்டதும் சுட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சுயாஷ் தீட்சித் மிகவும் கஷ்டப்பட்டு சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்று இருக்கிறார். மேலும் அங்கு சென்று தன்னுடைய நாட்டின் கொடியை அங்கு நட்டு இருக்கிறார். அதேபோல் அங்கு விதை ஒன்றை போட்டு தண்ணீர் விட்டு இருக்கிறார்.

நாமும் குடிமகனாகலாம்
இந்த புதிய நாட்டிற்கு அவர் 'தி கிங்கிடம் ஆப் சுயாஷ் தீட்சித்' என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நாட்டிற்கு நமக்கும் குடிமகனாக செல்லலாம். அவரிடம் அனுமதி பெற்று குடிமகனுக்கான உரிமையை பெற வேண்டுமாம். மேலும் அங்கு நிலம் வாங்கவும் இப்போதே விண்ணப்பிக்கும் படி அவர் கூறியிருக்கிறார். அங்கு நிலம் வாங்கியவர்கள் உடனடியாக அங்கு செடி நட்டு தண்ணீர் விட வேண்டும் என்பது அவர் வைத்திருக்கும் சட்டம்.

ஐநாவிடம் கோரிக்கை
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக 'சாப்டினேட்டர்' என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபனான இவர் தான் தனது நாட்டிற்கு அங்கீகாரம் பெற முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஐநா சபைக்கு மெயில் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications