போட்டுத்தள்ளிட்டோம்.. போய் பாருங்க.. பாகிஸ்தானுக்கு போன் போட்டு சொன்ன இந்தியா! #SurgicalStrike
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் யூகிக்க முடியவில்லை. முப்படைகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு இந்திய ராணுவம் இந்த தாக்குதலை வெற்றிகரமாக முடித்தது. சிறப்பு படையினரும் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர்களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிக்கு, இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ரன்பீர் சிங் போன் மூலம், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்களை நாங்கள் அழித்துள்ளோம். அதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நீங்களும் தீவிரவாதிகளை ஒழிக்க எங்களுக்கு ஆதரவு வழங்குங்கள்" என்று ரன்பீர் சிங், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிக்கு போனில் தெரிவித்துள்ளார்.
அதாவது, நாங்கள் போட்டுத்தள்ளிவிட்டோம், நீங்கள் பிணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்பதை நாகரீகமாக கூறியுள்ளார் ரன்பீர் சிங். இதன்மூலம், இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்திவிட்டதாக உலக நாடுகள் பழி சொல்வதிலிருந்தும் தப்பிக்க இந்த நடவடிக்கையை இந்த ராணுவம் எடுத்துள்ளது. அதாவது, பாகிஸ்தானின் உதவியை கோரியபடியேதான், நாங்கள் தீவிரவாதிகளை அழித்தோம் என இந்தியா வாதிட இந்த போன் அழைப்பு ஒரு ஆதாரமாக இருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு ஆலோசகர்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications