கதற கதற ஆடைகளை களைந்து அந்தரங்க பகுதியில் சோதனை: தேவ்யானி கடிதம்
டெல்லி: அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவ்யானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவ்யானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விதிமுறை பின்பற்றப்படவில்லை..
அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன்.

பல்வேறு சோதனைகள்..கை விலங்கு
ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள்.

ஆடை களைந்து அந்தரங்கத்தில்..
என் ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அத்துடன் உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனை நடத்தினர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரிகளையும் என்னிடம் இருந்து எடுத்தனர்.

போதை கும்பலுடன்...
கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர்.

கதறியும் விடவில்லையே..
நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை. இப்போது நாடு எனக்கு ஆதரவாக இருப்பது புதிய பலத்தை தருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications