2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு
மணிலா: 2019-ம் ஆண்டிற்கான ரமோன் மாக்சேசே விருதை இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் வென்றுள்ளார். ரமோன் மாக்சேசே விருது ஆசியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
ரமோன் மக்சேசே விருது ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் பொறுப்பாளர்களால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டு அரசின் அனுமதியுடன் அந்நாட்டு முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை எடுத்துரைக்க இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.

மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மக்சேசேவின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பொது சேவை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் பண்புகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, விருது வழங்கப்படுகிறது.
இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது. என்.டி.டி.வி இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியராக இருக்கும் ரவீஷ் குமார், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொலைக்காட்சி பத்திரிகையாளர்களில் ஒருவராக திகழ்வதாக ரமோன் மாக்சேசே விருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.
மேலும் தற்போது விருது வென்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரான ரவீஷ் குமாரின் பிரைம் டைம் நிகழ்ச்சியானது, யதார்த்த வாழ்க்கை, அது சார்ந்த சாதாரண மக்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாக கையாண்டு உலகிற்கு எடுத்துரைக்கிறது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
சாதாரண பொதுமக்களின் குரலாக ஒலிக்க துவங்கினால் நீங்களும் கூட ஒரு பத்திரிகையாளரே என்றும் விருதை அறிவித்துள்ள அமைப்பு தெரிவித்துள்ளது.
2019 ரமோன் மாக்சேசே விருதை வென்ற மற்ற நான்கு பேர் மியான்மரைச் சேர்ந்த கோ ஸ்வீ வின், தாய்லாந்தைச் சேர்ந்த அங்கானா நீலபாய்ஜித், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரேமுண்டோ புஜாண்டே கயாபியாப் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங்-கி ஆகியோர் ஆவர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications