2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு
மணிலா: 2019-ம் ஆண்டிற்கான ரமோன் மாக்சேசே விருதை இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் வென்றுள்ளார். ரமோன் மாக்சேசே விருது ஆசியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
ரமோன் மக்சேசே விருது ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் பொறுப்பாளர்களால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டு அரசின் அனுமதியுடன் அந்நாட்டு முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை எடுத்துரைக்க இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.

மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மக்சேசேவின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பொது சேவை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் பண்புகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, விருது வழங்கப்படுகிறது.
இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது. என்.டி.டி.வி இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியராக இருக்கும் ரவீஷ் குமார், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொலைக்காட்சி பத்திரிகையாளர்களில் ஒருவராக திகழ்வதாக ரமோன் மாக்சேசே விருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.
மேலும் தற்போது விருது வென்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரான ரவீஷ் குமாரின் பிரைம் டைம் நிகழ்ச்சியானது, யதார்த்த வாழ்க்கை, அது சார்ந்த சாதாரண மக்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாக கையாண்டு உலகிற்கு எடுத்துரைக்கிறது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
சாதாரண பொதுமக்களின் குரலாக ஒலிக்க துவங்கினால் நீங்களும் கூட ஒரு பத்திரிகையாளரே என்றும் விருதை அறிவித்துள்ள அமைப்பு தெரிவித்துள்ளது.
2019 ரமோன் மாக்சேசே விருதை வென்ற மற்ற நான்கு பேர் மியான்மரைச் சேர்ந்த கோ ஸ்வீ வின், தாய்லாந்தைச் சேர்ந்த அங்கானா நீலபாய்ஜித், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரேமுண்டோ புஜாண்டே கயாபியாப் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங்-கி ஆகியோர் ஆவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications