இந்தோனேசியாவில் இந்தியருக்கு தூக்கு நிறைவேற்றப்படவில்லை... சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
டெல்லி: இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் குர்தீப் சிங் உள்பட 14 பேருக்கு இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்திருந்தது.

இவர்களில் இந்தோனேசிய பெண் ஒருவரும் அடங்குவார். ஆனால் ஒரே நேரத்தில் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், நைஜீரியாவை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில் எஞ்சிய 10 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தியதால் இந்தியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். "இந்தோனேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை" என சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications