இலங்கை கடற்படையினர் மீது இந்தியா தாக்குதல் நடத்த அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
டெல்லி: தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி முத்துக்கருப்பன் வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவில் தமிழக மீனவர்கள் விவகாரத்தை தமிழக எம்.[பி.க்கள் இன்று எழுப்பினர். அப்போது திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வரோ மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார். ஆகையால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அதிமுக எம்பிக்கள் குறுக்கி ஜெயலலிதாவை விமர்சித்ததற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் அதிமுக எம்பி முத்துகருப்பன் பேசுகையில், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். எனவே மீனவர்களை காப்பாற்ற இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications