எல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள், அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் இந்தியாவின் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இந்தியா அழித்தது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை காணப்படுகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படை வீரர்களை குவித்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் கிம்காரன் செக்டாரை ஒட்டிய இந்திய எல்லை அருகே பாகிஸ்தானின் எப்.16 ரகத்தைச் சேர்ந்த 4 போர் விமானங்கள் பறந்துள்ளன. இதனை ரேடாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
நமக்கும் ஒரு டிவி.. அது தான் நமோ டிவி.. உற்சாகத்தில் பாஜக!
இதையடுத்து அந்த பகுதிக்கு su -30 எம்.கே.ஐ மற்றும் மிரேஜ் ஜெட் உள்ளிட்ட இந்திய போர்ப்படை விமானங்கள் அவற்றை நோக்கி விரைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் பின்வாங்கி சென்றன. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.