எல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள், அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் இந்தியாவின் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இந்தியா அழித்தது.

 Indian radars detected a large sized UAV & package of 4 Pakistani F-16s flying close to Indian border

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை காணப்படுகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படை வீரர்களை குவித்துள்ளன.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் கிம்காரன் செக்டாரை ஒட்டிய இந்திய எல்லை அருகே பாகிஸ்தானின் எப்.16 ரகத்தைச் சேர்ந்த 4 போர் விமானங்கள் பறந்துள்ளன. இதனை ரேடாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு su -30 எம்.கே.ஐ மற்றும் மிரேஜ் ஜெட் உள்ளிட்ட இந்திய போர்ப்படை விமானங்கள் அவற்றை நோக்கி விரைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் பின்வாங்கி சென்றன. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+