வேலை, சேமிப்பை விட்டுவிட்டு உடுத்திய உடையுடன் நேபாளத்தில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்
கோரக்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் வசித்து வரும் இந்தியர்கள் உடுத்திய ஆடையுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு வசித்து வந்த இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதல் நாடாக இந்தியா தான் அங்கு மீட்பு பணியை மேற்கொள்ள விமானப்படை விமானங்கள், மருத்துவர்கள், மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தது.

இந்தியர்கள்
பல ஆண்டுகளாக நேபாளத்தில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களின் வேலை, உடைமைகள், சேமிப்பு ஆகியவற்றை விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று உடுத்திய உடையுடன் நாடு திரும்பி வருகின்றனர்.

நிலநடுக்கம்
நேபாளத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த சுரேஷ் சாய்(41) தனது குடும்பத்தாருடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்கு வந்துவிட்டார். காத்மாண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் நான் பேருந்தில் ஏறும் வரை என் காலடியில் உள்ள நிலம் அதிர்ந்து கொண்டே இருந்தது என்றார்.

நகை பணம்
இடிந்து விழுந்த வீட்டுக்குள் நாங்கள் வைத்திருந்த பணம், நகைகளையாவது எடுத்து வரலாம் என்று நினைத்து முயன்றபோது முடியவில்லை. 20 ஆண்டு உழைப்பு போய்விட்டது. எனக்கு இங்கு வேலை இல்லை. அதனால் நான் நேபாளத்திற்கு திரும்பி செல்ல உள்ளேன் என்று சுரேஷ் தெரிவித்துள்ளார். சுரேஷ் போன்று பலரும் தங்களின் உடைமைகளை விட்டுவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

முகாம்கள்
நேபாளத்தில் இருந்து வெளியேறி வரும் இந்தியர்களுக்காக எல்லையில் மற்றும் கோரக்பூர் போன்ற பெரிய நகரங்களில் மத்திய அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. நேபாளத்தில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் அந்த முகாம்களை அடைந்த பிறகு அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர்.

மீட்பு
இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் இந்தியர்கள் நேபாளத்தில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications