கேரள சமூக ஆர்வலருக்கு “இந்திரா காந்தி” விருது - சோனியா காந்தி வழங்குகிறார்
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு வருகின்ற 31 ஆம் தேதியன்று டெல்லியில் இந்திரா காந்தி விருது வழங்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பி.வி.ராஜகோபால். 67 வயதான சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான இவர் டெல்லியில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார்.

மேலும் ஏக்தா பரிஷத் என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக உள்ள இவர் மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்து வருவதற்காக ராஜகோபாலுக்கு இந்திரா காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டிற்கான 29 ஆவது விருதை அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்க உள்ளார்.
இந்திரா காந்தி நினைவு நாளான 31 ஆம் தேதி இந்த விருது ராஜகோபாலுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசும் அவருக்கு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications