நான் தான் உன் அம்மா என யாரிடமும் கூறாதே: மகனுக்கு பணம் அளித்து வந்த இந்திராணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திராணி முகர்ஜி தான் தான் அம்மா என்று யாரிடமும் கூறாமல் இருக்க மிகைல் போராவுக்கு பணம் அளித்து வந்துள்ளார்.

ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்தார். சம்பவம் நடந்த அன்று இந்திராணி அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் வசித்து வந்த தனது மகன் மிகைல் போராவை மும்பைக்கு வரவழைத்து தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

Indrani made sure Sheena, Mikhail were not in touch before murder

ஷீனாவை கொலை செய்யும் முன்பு மிகைலுக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார் இந்திராணி. அதை குடித்த பிறகும் மிகைல் ஒருவழியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஷீனா கவுஹாத்தியில் இருந்து மும்பை வந்த பிறகும் மிகைலுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்த அன்று அவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும்படி இந்திராணி பார்த்துக் கொண்டுள்ளார். சொத்து விவகாரம் பற்றி பேச வேண்டும் என்று கூறி மிகைலை மும்பைக்கு வரவழைத்துள்ளார் இந்திராணி.

ஷீனாவின் கொலை விவரம் வெளியே தெரிய வந்ததும் நான் தான் உன் அம்மா என்று யாரிடமும் தெரிவிக்காதே என்று கூறி மிகைலுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் இந்திராணி. இந்த தகவலை மிகைலே தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திராணியுடனான பிரச்சனை குறித்து ஷீனா தனக்கு அனுப்பிய இமெயில் விவரங்களை மிகைல் போலீசாரிடம் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+