காஷ்மீர் எல்லையில் ராணுவத்துடன் துப்பாக்கி சண்டை.. 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பரமுல்லா மாவட்டத்தில் துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ, இன்று காலை, இரண்டு தீவிரவாதிகள் முயன்றனர். ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன், இந்திய ராணுவம் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. இந்த சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் இருவரை ராணுவம் சுட்டுக்கொன்று அவர்களின் முயற்சியை முறியடித்தது.

சுமார் 4 தீவிரவாதிகள் இந்த ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் நம்புவதால் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் தீவிரவாதிகளின் 3வது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.












Click it and Unblock the Notifications