ஹோமோ செக்ஸ் இன்போஃசிஸ் ஊழியரை, ரகசியமாக படம் பிடித்து மாட்டி விட்ட மனைவி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கணவரின் ஓரினச் சேர்க்கை விவகாரத்தை ரகசிய கேமராவில் படம்பிடித்து அவரை போலீசில் சிக்க வைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பல் டாக்டர்.

பெங்களூரில் வசிக்கும் 32 வயது இன்ஜினியர் ஜான்சன். இன்போசிஸ் நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி எலிசபெத் (தம்பதிகள் பெயர் மாற்றப்பட்டுள்ளது). எலிசபெத் பெங்களூரில் பல் டாக்டராக பணியாற்றுகிறார். திருவனந்தபுரத்தில் பிறந்து அபுதாபியில் வளர்ந்தவரான ஜான்சனுக்கும், எலிசபெத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

Infosys techie arrested after wife catches his gay acts on spycam

ஆரம்பம் முதலே எலிசபெத் மீது, ஜான்சன் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். கடந்த மே மாதம் முதல் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தனர். ஜான்சனின் நடவடிக்கைகள் எலிசபெத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஜான்சன் லிப்ஸ்டிக்கை தினந்தோறும் உதட்டில் பூசுவதையும், பெண்கள் அணியும் பேண்டீ போன்ற ஜட்டியை பயன்படுத்துவதையும் எலிசபெத் கவனித்துள்ளார்.

அவரது குணங்கள், நடவடிக்கைகள் பெண்மை தன்மையுடையதாகவே இருந்துள்ளது. மேலும், எலிசபெத்துடன் உறவு கொள்ளாமல் ஜான்சன் தனி அறையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், மனநல மருத்துவரை பார்க்கவும் எலிசபெத் தனது கணவனுக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்துவிட்டாராம் ஜான்சன். மாமியார், மாமனாரிடம் சொன்னபோது, தேவைப்பட்டால் விவாகரத்து செய்துவிட்டு போய்விடு என்று மருமகளிடம் எரிந்து விழுந்துள்ளனர்.

காலை 8 மணிக்கு அலுவலகத்துக்கு செல்லும் ஜான்சன் இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புவாராம். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் தனது கணவரின் நடவடிக்கைகளை எலிசபெத் விசாரித்துள்ளார். எலிசபெத் வீட்டில் இல்லாத நேரத்தில் சில ஆண்களை ஜான்சன் அழைத்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி கேட்டால், பிஸினஸ் சம்பந்தமாக ஆலோசிக்க நண்பர்கள் சிலர் வந்ததாக ஜான்சன் கூறியுள்ளார்.

கணவர் மீதான சந்தேகம் வலுக்கவே வீட்டின் ஹால், படுக்கை அறை ஆகியவற்றில் ரகசிய கேமராக்களை வைத்து கண்காணிக்கும் நடவடிக்கையில் எலிசபெத் இறங்கினார். கடந்த 1ம் தேதி அன்று ஒருவார விடுமுறையில் தனது தாய் வீட்டுக்கு செல்வதற்காக தும்கூர் புறப்பட்டு சென்றார் எலிசபெத். ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய எலிசபெத் ரகசிய கேமராக்களில் பதிவானதை பார்வையிட்டார்.

அப்போது மற்றொரு ஆணுடன் தனது கணவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு திடுக்கிட்டார். அதை சி.டி.யில் பதிவு செய்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஜான்சன் மீது எலிசபெத் புகார் அளித்தார். ஜான்சன் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை தெரிந்தும் தனது மாமியார், மாமனார் அவருக்கு திருமணம் செய்து வைத்து தன்னை மோசடி செய்துவிட்டாக கூறியிருந்தார். இந்திய சட்டப்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்பதால், ஜான்சன் மீது ஐ.பி.சி 377வது பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரது பெற்றோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+