கை, கால்களை வளைத்து யோகா செய்யத் தயாராகும் கடற்படை!
பெங்களூரு: இந்தியா முழுவதும் யோகா ஜூரம் ஆட்டிப் படைக்கிறது. எங்கு பார்த்தாலும் யோகா யோகா என்ற பேச்சாகவே உள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக யாரைப் பார்த்தாலும் யோகா பற்றி பாசிட்டிவாகவோ அல்லது நெகட்டிவாகவோ பேசிக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.
சோசியல் மீடியாக்களில் யோகா தினம் குறித்த பேச்சாகவும், எழுத்தாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் கமோர்தாவில் கடற்படை மாலுமிகள் யோகா பயிற்சி செய்வது குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி வெளியிட அது இப்போது வேகமாக டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.

கமோர்தா, இந்தியாவிலேயே தயாரிக்கபப்ட்ட போர்க்கப்பலாகும். கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட கப்பல் இது. கடந்த ஆண்டுதான் இந்தியக் கடற்படைக்கு இது அளிக்கப்பட்டது.
மோடி கூறியபடி, ‘யோகாவானது மனதையும், உடலையும் ஒருங்கிணைக்கிறது. செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வேகத்தைத் தருகிறது' என்று கடற்படையினர் கூறுகிறார்கள்.
முதலாவது சர்வதேச யோகா தினம் குறித்து கடற்படையினருக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல பகுதிகளில் உள்ள இந்தியக் கடற்படையினருக்கு சர்வதேச யோகா தினத்தன்று யோகாசனம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
மேலும் சர்வதேச யோகா தினத்தன்று காலை 7 மணிக்கு யோகாசன நிகழ்ச்சியை கடற்படையினர் நிகழ்த்தவுள்ளனர். அதே நேரத்தில்தான் டெல்லியில் ராஜ்பாத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மும்பையில் பிரமாண்டமான முறையில் கடற்படையினர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஒத்திகை ஐஎன்எஸ் விராத் கப்பலில் நடந்து வருகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications