எதிர்பார்த்த மரியம் நவாஸ் ஷெரீப் வரவில்லை: ஆனால் குல்ஸும் வந்திருக்கிறார்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்றபோது அவரை பாராட்டியவர்களில் அவரது மகளும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகியுமான மரியமும் (40) ஒருவர். பாராட்டியதோடு மட்டும் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவை புதுப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பழையவற்றை மறந்துவிட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் உறவை புதிதாக துவங்க வேண்டும் என்று மரியம் நவாஸ் ஷெரீப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரும் பதவியேற்பு விழாவுக்கு வருவார் என்று பெரிதும் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் டெல்லி வரமாட்டார் என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் இன்று காலை டெல்லி வந்திறங்கினார். அவருடன் அவரது மனைவி குல்ஸும் மற்றும் மகன் ஹுசைன் நவாஸ் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications