சத்தீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை- மூத்த கமாண்டர் உட்பட 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர்- ஒடிஷா மாநிலங்களில் எல்லையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை அப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர்- ஒடிஷா எல்லையில் நுபாடா என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் அடர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையில் நேற்று இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை அடர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய கமாண்டர்
இந்த மோதலில் ஜெயராம் என்ற சலபதி என்ற மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ1 கோடி பரிசுத் தொகை அறிவித்திருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமித்ஷா பாராட்டு
மாவோயிஸ்டுகளை அழித்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நக்சலிசத்தை (மாவோயிஸ்டுகளை) இந்தியாவில் இருந்து வேரோடு அழிக்கும் நடவடிக்கையின் இறுதி நிலையில் இருக்கிறோம். நமது பாதுகாப்புப் படையினருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். மேலும் மாவோயிஸ்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நமது பாதுகாப்புப் படையினர் இணைந்து போராடுகின்றனர். நக்சலிசம் ஒழியக் காத்திருக்கிறது எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications