5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா?
டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன.
அதன்படி, கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

முதல் யோகா தினம்...
அதன்படி, டெல்லியில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். முக்கிய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2வது யோகா தினம்...
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கென தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பாரம்பரியக் கலை...
தியானம் மற்றும் யோகா என்பது உலகறிந்த மிகப்பழமையான மன, உடல் பயிற்சியாகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது யோகா. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, நம் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாரம்பரியக் கலை.

நிரூபணம்...
உயிரினங்கள், பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு யோகா முத்திரைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. யோகாவின் மூலமாக பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்...
இத்தகைய யோகாவை உலக மக்கள் அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்பதே, இந்த சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நோக்கமாகும். யோகா தினத்தை முன்னிட்டு பரவலாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications