5000 ஆண்டு பழமையான யோகாவை எத்தனை நாடுகள் ஆதரிக்கின்றன தெரியுமா?
டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன.
அதன்படி, கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

முதல் யோகா தினம்...
அதன்படி, டெல்லியில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். முக்கிய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2வது யோகா தினம்...
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கென தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பாரம்பரியக் கலை...
தியானம் மற்றும் யோகா என்பது உலகறிந்த மிகப்பழமையான மன, உடல் பயிற்சியாகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது யோகா. இது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, நம் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாரம்பரியக் கலை.

நிரூபணம்...
உயிரினங்கள், பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு யோகா முத்திரைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. யோகாவின் மூலமாக பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்...
இத்தகைய யோகாவை உலக மக்கள் அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்பதே, இந்த சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நோக்கமாகும். யோகா தினத்தை முன்னிட்டு பரவலாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications