ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 1 வரை தடை நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 3ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 1ம் தேதிவரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications