2018 ஐபிஎல் போட்டி.. ஜனவரியில் பெங்களூரில் ஏலம்.. அணிகளுக்கு புதிய உரிமை!
2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகான ஏலம் ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது.
டெல்லி: 2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகான ஏலம் ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது. மேலும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளுக்குமான பட்ஜெட் தொகை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியின் ஐபிஎல் போட்டியின் 11 வது சீசனில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

அதன்படி எப்போது போல இல்லாமல் இந்த முறை போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும். முன்பு போட்டிகள் சரியாக 8 மணிக்கு நடந்து கொண்டு இருந்தது.
அதேபோல் ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு 66 கோடியாக இருந்த பட்ஜெட் தற்போது 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏலம் பெங்களூரில் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடக்க உள்ளது. பல முக்கியமான வீரர்கள் மீண்டும் இந்த முறை ஏலத்திற்கு வர இருப்பதால் இந்த நிகழ்வு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் வந்து இருப்பதால் இப்போதே ஐந்தே போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications