அஸ்ஸாமில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி எஸ்.பி.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அஸ்வினி எம்.கோட்னீஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான அஸ்வினி எம்.கோட்னீஸ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளவர் அஸ்வின் எம். கோட்னீஸ். அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் காவல்துறையினருக்கிடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் ரைபிள் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
அஸ்வின் கோட்னீஸ் 2003-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார்.












Click it and Unblock the Notifications