கர்நாடக அரசு உத்தரவுக்கு கட்டுப்படுவேன்.. புதிய பொறுப்பை ஏற்ற ரூபா பேட்டி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அரசு உத்தரவிற்கு கட்டுப்படுவேன் என்று, கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்தார்.
கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா போக்குவரத்து பிரிவு கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இன்று அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த ரூபா, "கிரண்பேடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆதரவு மிகவும் மதிப்பு மிக்கது. அரசு உத்தரவுக்கு கட்டுப்படுவேன். எனவேதான் உத்தரவை ஏற்று புதிய பதவியேற்க வந்துள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications