விடைபெற்றது கூட்டணி ஆட்சி சகாப்தம்! 30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு!!
டெல்லி: நாட்டில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது.
நாடு இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன.

அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கும் கிடைக்கவில்லை.
தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது.
பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். ஆனால் பாஜக 283 இடங்களைப் பெற்றுள்ளது.
அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது.
மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications