சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் குற்றமா? உயர்நீதிமன்றம் கொடுத்த வித்தியாசமான உத்தரவு!
ராய்ப்பூர்: சடலத்துடன் செக்ஸ் வைத்து கொண்டது குறித்த வழக்கு ஒன்று சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. இதில், சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையத்தில் 9 வயது மதிக்கத்தக்க தலித் சிறுமியை காணவில்லை என்று புகார் பதிவாகியிருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. நீண்ட தேடுதலுக்கு பிறகு அருகில் இருந்த ஆள் நடமாட்டம் அற்ற காட்டு பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மட்டுமல்லாது சிறுமி கொல்லப்பட்ட பின்னரும் சடலத்துடன் யாரோ உடலுறவில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணையில் நீல்சந்த் என்பவரை போலீஸ் கைது செய்தது. அவரை தொடர்ந்து, நீல்காந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொல்லப்பட்ட சிறுமி, நீல்சந்த் வீட்டில் அருகில் வசித்து வந்திருந்தார். சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரமாக பார்த்து, நீல்சந்த் அவரது வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி இதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்த முயன்றுள்ளார். ஆனால், சத்தம் போடக்கூடாது என்று கூறி சிறுமியை பலமாக தாக்கி, அவரை நீல்சந்த் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது நண்பர் நீல்காந்த் என்பவரின் உதவியுடன் சடலத்தை ஆள் நடமாட்டம் அற்ற காட்டு பகுதிக்கு எடுத்து சென்றிருக்கிறார்.
அங்கு இருவரும் சேர்ந்து குழியை வெட்டி சிறுமியின் சடலத்தை போட்டிருக்கின்றனர். அப்போது நீல்காந்த் சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இது அனைத்தும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இருவர் மீதும் கொலை, குற்றத்தை மறைத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீல்காந்த் விசாரணை நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
நீதிமன்றமும் வழக்கை விசாரித்து, போக்சோ குற்றத்திலிருந்து அவரை விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பில் உயிரிழந்த சிறுமியின் தாய், போக்சோ வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இரண்டு வழக்குகளின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக வராது என்று கூறியுள்ளனர்.
மேலும், "ஐபிசியின் 363, 376 (3) பிரிவுகள், போக்சோ சட்டத்தின் பிரிவு 6, 2012 மற்றும் 1989 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3(2)(v) ஆகியவற்றின் கீழ் இது போக்சோ அல்லது கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது. சடலத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்வது நெக்ரோபிலியா என்று குறிப்பிடப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு, ஆனால் சடலத்துடன் செக்ஸ் என்பது வன்கொடுமை குற்றமாகாது" என்று கூறியுள்ளனர்.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தளங்களில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications