கர்நாடகாவில் நாய் செத்தாலும் மோடி பொறுப்பா? கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து முத்தலிக் சர்ச்சை பேச்சு
படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு முத்தலிக் பேசினார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் பிரதமர் மோடிதான் பொறுப்பா? என பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கவுரி லங்கேஷை இந்துத்துவா தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்மையில் பரசுராம் என்ற தீவிரவாதி, கவுரி லங்கேஷ் எனக்கு யாரென்றே தெரியாது. ஆனால் இந்து மதத்துக்கு எதிரானவர் என்பதால் சுட்டுக் கொல்ல உத்தரவு வந்தது. அதனால் சுட்டுக் கொன்றேன் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பரசுராமும் ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்கும் ஒன்றாக இருக்கும் படம் ஊடகங்களில் வெளியானது. பரசுராமுக்கும் ஸ்ரீராம் சேனாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரமோத் முத்தலிக், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து யாரும் வாய் திறப்பதே இல்லை. இப்போதே பிரதமர் மோடி ஏன் படுகொலைகள் குறித்து மவுனம் காக்கிறார் என்கிறார்கள்.
கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் கூட பிரதமர் மோடிதான் பொறுப்பாக வேண்டுமா? என்றார். கவுரி லங்கேஷை நாயுடன் ஒப்பிட்டு முத்தலிக் பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications