பெருநகரங்களில் மின்கட்டணம் மிக அதிகம் செலுத்த நேரிடுவது ஏன் தெரியுமா?
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 50% மின் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்துக்கு வீடுகளில் 400 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு இந்த மின் கட்டணம் குறைப்பு பொருந்தும்.
பொதுவாக இந்தியாவில் பெருநகரங்களில் அதிகளவுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களில் இந்த நிலைதான் இருக்கிறது. இது தொடர்பாக "Indiaspend" இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மும்பையைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் எனர்ஜியும் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ5.13 செலுத்த வேண்டும். மின் கட்டண யூனிட்டுகள் அதிகமாகும் போது ஒரு யூனிட்டுக்கு ரூ11.27ம் செலுத்த வேண்டியுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரோ ஒரு யூனிட்டுக்கு ரூ10.72 முதல் ரூ15.3 வரை செலுத்த நேரிடுகிறது.
டெல்லியில் வீட்டு மின் கட்டணம் ரூ4.52 முதல் ரூ5.57 ஆகவும் பெங்களூருவில் ரூ3.81 முதல் ரூ6.19 வரையிலும் செலுத்த வேண்டியுள்ளது.
குஜராத்தில் வீட்டுக்கான மின் கட்டணம் ரூ4.05 முதல் ரூ 5.68 வரை கட்ட வேண்டியுள்ளது.
ஆனால் ஒரு யூனிட் மின்சார தயாரிப்புக்கான கட்டணம் எப்படி இருக்கிறது தெரியுமா? அனல்மின்சாரம் மூலம் ஒரு யூனிட்டுக்கு ரூ2.79 முதல் ரூ4.01 வரை; அணுசக்தி மூலம் ஒரு யூனிட்டுக்கு 0.95 பைசா முதல் ரூ3.41 வரை, இயற்கை எரிவாயு மூலமாக ரூ2.66 முதல் ரூ3.99 வரை என செலவாகிறது.
இப்படி இருக்கும் போது மின்சாரத்துக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன்? மின்சார விநியோகத்துக்காகத்தான் இவ்வளவு செலவும் அதிகமாகிறதாம்.
இப்படி மின்சார விநியோகம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இவைகளால்தான் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாம். மற்றொரு காரணம் மின் திருட்டுமாம்..
தமிழகம், கர்நாடகாவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது; பீகார், ஜார்க்கண்ட், உ.பி.யில் விவசாயிகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ2க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால்தான் இந்திய மாநிலங்களின் மின்வாரியங்கள் மிக மோசமான நட்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறதாம்..
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications