இஷ்ரத் என்கவுண்ட்டர்: ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரை விசாரிக்க உள்துறை அனுமதி மறுப்பு!!
டெல்லி; இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரை விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
2004 ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டனர் எனக்கூறி வழக்கை திசை திருப்ப மும்பை போலீசார் முயற்சித்தனர்.

இதையடுத்து போலீசார் கூறுவது உண்மை இல்லை என்றும், இந்த வழக்கை முடிக்க குஜராத் மாநில காவல் துறை உயரதிகாரிகள் பலர் முயற்சிக்கின்றனர்; இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இஷ்ரத் ஜஹான் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சுமார் 10க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்தது. அத்துடன் முதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
அதில் அப்பாவிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுன்டர் செய்ததாக 7 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஐ.பி. முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமாரும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் பாரதிய ஜனதாவின் தற்போதைய தலைவரும் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித்ஷா விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஐ.பி. அதிகாரி ராஜிந்தர் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகமோ இஷ்ரத் வழக்கில் ராஜேந்தர் குமாருக்கு தொடர்பிருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை என்பதால் இதற்கான அனுமதியை வழங்க இன்று மறுத்துவிட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications