இந்தியாவை தனிமைப்படுத்த பாக் - ஆப்கான் ஒப்பந்தம்?
டெல்லி: இந்தியாவை தனிமைப்படுத்தும் வகையில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி இருப்பது நாட்டின் உளவுத்துறை வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்தியாவை கவலை அடைய வைத்துள்ளது. இந்த இரு நாடுகளும் உறவுகளை வலுவாக்கிக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பதாக கூறுகின்றன.
அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து ஒன்றில், இருநாட்டு உளவு அமைப்புகளும் எதிரி நாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஷரத்துதான் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நட்பு நாடு..
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்து உளவுத்துறை தகவல்களை பரிமாறி வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் பொதுவாக பாகிஸ்தானையே எதிரி நாடாகத்தான் கருதப்பட்டு வருகிறது.
பொய் பரப்பும் ஐ.எஸ்.ஐ.
ஆனால் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி பொறுப்பேற்ற பின்னர் அவர் பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டினார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பொய்யான தகவலை பாகிஸ்தான் உளவு அமைப்பபான ஐ.எஸ்.ஐ. பரப்பி வருகிறது. இதனையே ஆப்கானிஸ்தான் உளவுத்துறைக்கும் ஐ.எஸ்.ஐ. தெரிவித்து வருகிறது.
தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்
உண்மையில் ஐ.எஸ்.ஐ. உதவியுடன்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை மறுத்து இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் எதிரிநாடாக்கிவிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. இதன் ஒருபகுதியாகத்தான் இந்த ஒப்பந்தத்தை இந்திய உளவு அமைப்பு கருதுகிறது. இந்த ஒப்பந்தத்தை ஆப்கானிஸ்தான் பின்பற்றினால் அந்நாட்டிடம் இருந்து தீவிரவாதிகள் குறித்த உளவுத்துறை தகவல்கள் கிடைக்காமல் போவது இந்தியாவுக்கு பாதிப்பாக அமைந்துவிடும்.
இங்கிலாந்துக்கு என்ன வேலை?
இதனிடையே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான ஒப்பந்தத்தை உருவாக்கியதில் இங்கிலாந்தின் பங்களிப்பு இருப்பதாகவும் இந்தியா கருதுகிறது. இத்தகைய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானில் எதை சாதிக்க விரும்புகிறது என்பது குறித்தும் இந்தியா ஆராய்ந்து வருகிறது
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications