"நமஸ்தே நாசா".. நாசாவுடன் இணையும் இஸ்ரோ... நிலநடுக்க ஆய்வு சாட்டிலைட் ஏவத் திட்டம்!
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சி செய்ய நவீன செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளன.
விண்வெளி ஆராய்ச்சிகளைப் போலவே, பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறியவும் உலக நாடுகள் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.
சமயங்களில் சுனாமி எச்சரிக்கைக்கூட விடுக்கப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வகையிலான தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிலநடுக்க ஆய்வு...
எனவே, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவது தொடர்பான ஆராய்ச்சிகளை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வருகின்றன. தற்போது அதன் அடுத்தகட்டமாக இது தொடர்பாக ஆய்வு செய்ய நவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இருநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

ஆலோசனைக் கூட்டம்...
இது குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பை நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூட்டாக அறிவித்தனர்.

புதிய செயற்கைக்கோள்...
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் கூறுகையில், "நாசா-இஸ்ரோ கூட்டுத் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய செயற்கைக்கோளானது, பூமியின் சில சிக்கலான செயல்பாடுகளைக் கண்டறிய உதவும்.

2021ல்...
குறிப்பாக, பருவநிலை மாறுபாடு, பனிப் படலங்கள் சரிவு, சுனாமி, நிலநடுக்கம், எரிமலைச் சீற்றம் போன்ற பேரிடர்கள் குறித்து ஆய்வு செய்யும். வரும் 2021-ஆம் ஆண்டுவாக்கில் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

நிசார்...
இந்த செயற்கைக் கோளுக்கு நிசார் (NISAR) என்று பெயரிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்கள்யான்...
செவ்வாய் கிரகத்துக்கு மிகக் குறைந்த செலவில் மங்கள்யானை இந்தியா அனுப்பியபோதே, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையுடன் நாசா இணைய விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications