இந்தியாவின் “ஜிசாட்-16” செயற்கைக்கோள் – டிச. 4ல் பிரான்சிலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது!
பெங்களூர்: தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் விமான போக்குவரத்திற்கு உதவும் வகையிலான ஜிசாட் 16 செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக் கோள் மையத்தின் இயக்குனர் சிவக்குமார், "தொலைத் தொடர்பு வசதிகளை அதிகரிக்கும் விதமாக ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறையினர் அளித்தது வரும் தொலை தொடர்பு சேவையில் மேம்பாடுகளை ஏற்படுத்த முடியும். அதற்கு இந்த ஜிசாட் 16 முக்கிய பங்கு வகிக்க உள்ளது. தற்போது விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த ஜிசாட் -16 செயற்கை கோளின் ஆயுட் காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சாட் 3 இ செயற்கை கோளுக்கு மாற்றாக இது கருதப்படுகிறது.
இன்சாட் 3 சி செயற்கை கோளின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து. இன்சாட் 3 சி இதே விண்வெளி தளத்தில் இருந்து ஏரியான் 5-ஜி ராக்கெட் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜிசாட் -16 செயற்கை கோள் 865 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications